டெல்லி பள்ளியில் பயங்கரம் - முகத்தில் ரத்தம் வழிய கதறும் மாணவி - பதைபதைக்கும் வீடியோ!டெல்லி பள்ளியில் பயங்கரம் - முகத்தில் ரத்தம் வழிய கதறும் மாணவி - பதைபதைக்கும் வீடியோ!

டெல்லி பள்ளியில் பயங்கரம் – முகத்தில் ரத்தம் வழிய கதறும் மாணவி: டெல்லியில் குலாபி பாக் பகுதியில் சர்வோதயா என்ற பள்ளி இயங்கி வருகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. சொல்லப்போனால் மாணவர்கள் பிளேடு,கத்தி போன்றவைகளை பயன்படுத்தி சண்டையிட்டு வருகின்றனர். இதனால் பல மாணவர்கள் ரத்த காயங்களுடன் வீடு திரும்புகின்றனர்.

இந்நிலையில் , இது தொடர்பாக  வீடியோ ஒன்று எக்ஸ் வலைதளத்தில் பதிவேற்றப்பட்டது. அந்த வீடியோவில், ” ஒரு மாணவியின் முகத்தில் பிளேடு மற்றும் கத்தியால் வெட்டப்பட்டு ரத்தக் காயத்துடன் அழுது கொண்டே நிற்கிறார். அதை சக மாணவிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்து நிற்கும் விதமாக வீடியோவில் காட்சிகள் பதிந்துள்ளது. மேலும் இந்த வீடியோவை காவல்துறைக்கு டேக் செய்துள்ளனர். இருப்பினும் இப்பொழுது வரைக்கும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை  என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 2 லட்சம் பேர் இணைப்பு  – அரசு எடுக்கும் அதிரடி முடிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *