பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை !பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை !

கல்விக்கு சம்மந்தமில்லாத பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி போன்றவை நடத்தப்பட்டதுக்கு எதிராக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு அரசுப் பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் சொற்பொழிவை நடத்த மகாவிஷ்ணு என்பவர் பள்ளியின் சார்பில் அழைத்துவரப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ‘தன்னை உணர்ந்த தருணங்கள்’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றும்போது முழுக்க முழுக்க ஆன்மீகம் தொடர்பான கருத்துக்களை அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் என்று கூறியதோடு மறுபிறவி குறித்து பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். மேலும் கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது எனவும் பேசியுள்ளார்.

இது தொடர்பாக ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளம்பியுள்ளது. மறுபிறவி குறித்து பேசுவது மற்றும் ஆன்மீகம் குறித்து பேசுவது பள்ளி மாணவர்களுக்கு மூடநம்பிக்கை ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு எதிர்ப்புகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து புகார் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு சென்ற நிலையில் தற்போது தமிழக அரசினுடைய கவனத்திற்கும் சென்றது குறிப்பிடத்தக்கது.

செப் 17ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை? தமிழக அரசு விரைவில் அறிவிப்பு!

இந்நிலையில் கல்விக்கு சம்பந்தம் இல்லாத மற்றும் உரிய அனுமதி இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளையும் அரசுப் பள்ளிகளில் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *