கல்யாணம் செல்லாது.., டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசலை மிதித்த தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி!கல்யாணம் செல்லாது.., டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசலை மிதித்த தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி!

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ள சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் ரஜினியின் மூத்த மகளும் பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளன. இதனை தொடர்ந்து,  கடந்த 2022 ஜனவரி 17 அன்று இருவரும் பிரிய போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். தற்போது இருவரும் அவர்களுடைய கெரியரில் பிசியாக இருந்து வருகின்றனர்.

அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் கூட, இப்பொழுது வரை முறைப்படி டைவர்ஸ் வாங்காமல் இருந்து வந்தனர். இதனால் அவர்கள் மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.அந்த மனுவில், ”  2004 ஆம் ஆண்டு அவர்களுக்கு நடைபெற்ற கல்யாணத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. 

33 ஆண்டுகளுக்கு ரஜினிக்கு ஜோடியாகும் 54 வயது நடிகை.., தலைவர் 171 படத்துல இவங்க தான் ஹீரோயின்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *