ஐஸ்வர்யாவுக்காக தனுஷ் செய்த அந்த காரியம்.., விரைவில் ஒன்று சேருவார்களா?.., எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!ஐஸ்வர்யாவுக்காக தனுஷ் செய்த அந்த காரியம்.., விரைவில் ஒன்று சேருவார்களா?.., எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து  வந்த இவர்களுக்கு யாத்ரா  மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இப்படி குடும்பமாக வாழ்ந்து வந்த அவர்கள் கடந்த ஆண்டு பிரிந்து வாழ்ந்து போவதாக அறிவித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

மேலும் அவர்களை எப்படியாவது மீண்டும் சேர்க்க வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் பல முயற்சிகளை கையாண்டு வந்தார். ஆனால் எதுவுமே அவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது அவர்களின் மகன்கள் இருவரும் அம்மாவிடம் இருந்து வருகின்றனர். இருப்பினும் சினிமாவில் எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கும் மகன்களுடன் தனுஷ் செல்கிறார். அதே போல் ஐஸ்வர்யாவும் மகன்களை அழைத்து செல்கிறார்.

எனவே அவர்களுக்காகவே அவர்கள் சேர்வார்கள் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் சேர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தின் ட்ரைலரை  தனுஷ் தான் வெளியீட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதை வைத்து பார்க்கும் பொழுது அவர்கள் விரைவில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது வரை அவர்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அடேங்கப்பா.., “லால் சலாம்” படத்தின் பர்ஸ்ட் டே வசூல் இத்தனை கோடியா?.., சூப்பர் ஸ்டார்னா சும்மாவா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *