சென்னையில் இன்று திமுகவின் பவள விழா - முப்பெரும் விழாவாக கொண்டாட்டம் !சென்னையில் இன்று திமுகவின் பவள விழா - முப்பெரும் விழாவாக கொண்டாட்டம் !

தற்போது சென்னையில் இன்று திமுகவின் பவள விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் 1949 ம் ஆண்டு செப்டம்பர் 17 ந்தேதி தொடங்கப்பட்ட திமுகவின் பவள விழா மற்றும் பெரியார், அண்ணா, கட்சி உதயமான நாள் போன்றவை அனைத்தும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.

இந்த முப்பெரும் விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார். மேலும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

இதனையடுத்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, திமுகவின் முதன்மை செயலாளரான அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் வரவேற்புரை வழங்குகிறார். dmk mupperum vizha

அந்த வகையில் இயற்கை விவசாயியான 108 வயது மூதாட்டி பாப்பம்மாளுக்கு பெரியார் விருது,

திமுக மூத்த உறுப்பினரான அறந்தாங்கியை சேர்ந்த மிசா ராமநாதனுக்கு அண்ணா விருது, அத்துடன் முன்னாள் மத்திய இணை மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு கலைஞர் விருது,

மேலும் திமுக தீர்மானக் குழு தலைவர் கவிஞர் தமிழ்தாசனுக்கு பாவேந்தர் விருது, முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜனுக்கு பேராசிரியர் விருது,

முன்னாள் மத்திய இணை மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் விருதை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். அதை தொடர்ந்து பவள விழா மலரும் வெளியிடப்பட உள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா உறுதி – புதிய முதல்வர் யார்? 12 மணிக்கு அறிவிக்கும் ஆம் ஆத்மி கட்சி!

இதனை தொடர்ந்து திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொள்கின்றனர்.

மேலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மைதானத்தில் இருந்து விழாவை காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *