அரசு பேருந்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் - கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !அரசு பேருந்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் - கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

அரசு பேருந்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள். கேரள மாநிலம் திருச்சூரில் அரசுப் பேருந்து ஒன்றில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பெண் பயணம் செய்த பேருந்திலேயே அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் அங்கமாலியில் இருந்து தொட்டிபாலம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடிரென பிரசவ வலி ஏற்பட்டது.இதனை அடுத்து அரசு பேருந்து பேருந்து மருத்துவமனை நோக்கி சென்றது.

இந்நிலையில் பேருந்தானது மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்து குழந்தை பிறந்தது. மேலும் தனியார் மருத்துவமனையின் வாசலில் வந்து நின்ற பேருந்தை பார்த்ததும் மருத்துவமனை ஊழியர்கள் சார்பில் ஸ்ட்ரெச்சர் எடுத்துவரப்பட்ட நிலையில் அந்தப் பெண் ஏற்கனவே பிரசவிக்க ஆரம்பித்தது தெரியவந்தது.

நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி – உலகின் முதல்நிலை செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் !

இதனையடுத்து அந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் பேருந்துக்குள் சென்று அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *