இனி பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்தால் அவுட் - கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை கொண்டு வந்த கிளப்!!இனி பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்தால் அவுட் - கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை கொண்டு வந்த கிளப்!!v

இனி பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்தால் அவுட்: ஸ்போர்ட்ஸ் என்று எடுத்துக் கொண்டால் அனைவருக்கும் பிடித்த விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். இப்படி இருக்கையில் இங்கிலாந்தில் பிரபல கிரிக்கெட் கிளப் ஒன்று பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.

அதாவது கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் ஒவ்வொரு வீரரும் சிக்ஸர்களை பறக்க விட  தான் அதிகம் விரும்புவார்கள். ஆனால் இப்பொழுது  சிக்ஸர் அடித்தால் அவுட்  என்று ஒரு நூதனமான விதியை கொண்டு வந்துள்ளது.

இந்த விதியை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி உங்களுக்கு தோணுமே, அட ஆமாங்க நம்ம ஏரியாவுல கிரிக்கெட் விளையாடும் போது தலைக்கு மேல போன அவுட், சிக்ஸர் அடித்த அவுட் என்று நம் குழந்தை பருவத்தில் இருந்தபோது விளையாடி இருப்போம். india england

இப்படி உள்ளூர் மைதானத்தில் விளையாடுபவர்களுக்கு தான் இந்த விதியை இங்கிலாந்தில் பிரபல கிரிக்கெட் கிளப் கொண்டு வந்துள்ளது.

அதாவது இங்கிலாந்து நாட்டில் உள்ள  ‘சௌத்விக் அண்ட் ஷோர்ஹாம்’ உள்ளூர் கிரிக்கெட் என்ற கிளப்பிற்கு சொந்தமான மைதானம் தான் ஊருக்கு நடுவில் இருந்து வருகிறது. cricket club

Also Read: இனி இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணிக்கலாம் – WABetaInfo வெளியிட்ட முக்கிய தகவல்!!

இதனால் அந்த கிளப்பில் விளையாடும் வீரர்கள் சிக்‌ஸர்கள் அடிக்கும்போது மைதானத்திற்கு அருகில் இருக்கும் வீடுகளின் ஜன்னல்கள், கார் கண்ணாடிகள் உடைவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கிளப் நிர்வாகம் அதிரடி முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. cricket news in tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *