"எதிர்நீச்சல்" மாரிமுத்து சாவுக்கு இதான் காரணம்?.., மர்ம முடிச்சை அவிழ்த்த அகோரி.., என்ன நடந்தது?"எதிர்நீச்சல்" மாரிமுத்து சாவுக்கு இதான் காரணம்?.., மர்ம முடிச்சை அவிழ்த்த அகோரி.., என்ன நடந்தது?

“எதிர்நீச்சல்” மாரிமுத்து

தென்னிந்திய தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் ஜொலித்தவர் தான் மாரிமுத்து. வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த மாரிமுத்து சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதில் பெண்களை அடிமைப்படுத்தி கொடுமை படுத்தும் விதமாக நடித்திருந்தார். இருந்தாலும் அவரின் பேச்சுக்காகவே தனி ரசிகர்கள் உருவாகின. சொல்ல போனால் அவர் இல்லை என்றால் அந்த சீரியல் இல்லை என்ற அளவுக்கு பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்தார். இப்படி பீக்கில் இருந்து வந்த மாரிமுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.

அவரின் இழப்பை தற்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு அகோரி அவரின் இறப்பு இயற்கையானது இல்லை என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது இன்ஸ்டகிராமில் மனைவியுடன் சேர்ந்து ரீல்ஸ் செய்து பிரபலமான கலையரசன் என்பவர் தற்போது காலத்தை கணிக்கும் அகோரியாக மாறியுள்ளார். அப்போது மாரிமுத்து பற்றி பேசிய அவர்,’ மாரிமுத்து அந்த சீரியலில் வில்லனாக நடித்தது மட்டுமின்றி, பெண்களை அடிமை படுத்தி நடித்து வந்தார். இதனால் பெண்கள் அவருக்கு ஒரு சாவு வர கூடாத என்று சவித்ததால் தான் அவர் இறந்தார் என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  

நண்பா நண்பிகளே.., +2 மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய் – என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *