இந்திய U-19 அணியில் என்ட்ரி கொடுக்கும் ராகுல் டிராவிட் மகன் சமித் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இந்திய U-19 அணியில் என்ட்ரி கொடுக்கும் ராகுல் டிராவிட் மகன் சமித் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்திய U-19 அணியில் என்ட்ரி கொடுக்கும் ராகுல் டிராவிட் மகன் சமித்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமாக இருந்து வந்தவர் தான் ராகுல் ட்ராவிட். சமீபத்தில் நடந்த T20 உலக கோப்பை இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து கோப்பையை கைப்பற்றி கொடுத்து ஓய்வு பெற்றார்.

இந்திய U-19 அணியில் என்ட்ரி கொடுக்கும் ராகுல் டிராவிட் மகன் சமித்

இந்நிலையில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு நான்கு நாள் கொண்ட போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் இந்திய அணி அறிவித்திருந்தது.

அந்த வகையில் ரசிகர்களால்  இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்பு சுவர் அன்போடு அழைக்கப்படும் ஜாம்பவான்  ராகுல் டிராவிட்டின் மகன் சமித் இடம் பிடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இவருக்கு 2 வகையிலான தொடருக்கான அணியிலும் சமித்திற்கு இடம் கிடைத்துள்ளது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் மகாராஜா டி20 டிராபியில் மைசூரு வாரியர்ஸ் அணியில் தான் சமித் சீனியர் வீரர்கள் விளையாடும் போட்டியில் முதன் முதலாக அறிமுகமாகி உள்ளார்.

Also Read: பிரேசில் நாட்டில் X தளத்திற்கு தற்காலிக தடை – உச்சநீதிமன்றம் அதிரடி – எலான் மஸ்க் கடும் கண்டனம்!

அந்த போட்டியிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கினாலும் கூட சமித் ஏழு போட்டிகளில் 82 ரன்கள் அடித்துள்ளார்.

புலிக்கு பொறந்தது பூனையாகாது என்று ஒவ்வொரு ஆட்டத்திலும் நிரூபித்து வருகிறார். சமித் பேட்டிங் செய்வது மட்டுமின்றி மித வேக பந்து வீச்சாளர் ஆவார்.

இந்த போட்டிகள் புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த தொடர் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு

PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்

குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்

HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *