இந்திய பணக்காரர்களின் சொத்துமதிப்பு 40% உயர்வு - வெளியான ரிப்போர்ட் !இந்திய பணக்காரர்களின் சொத்துமதிப்பு 40% உயர்வு - வெளியான ரிப்போர்ட் !

முதல் 100 இந்திய பணக்காரர்களின் சொத்துமதிப்பு 40% உயர்வு என ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி முதல் இடத்திலும், கெளதம் அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. forbes report released

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள முதல் 100 இடங்களை பெற்றுள்ள பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது அவர்களின் சொத்துமதிப்பு உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் ரூ.9,91,850 கோடியுடன் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக வலம் வரும் ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஓராண்டில் மற்றும் ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. forbes report released Ambani – Adani wealth status increased 40 percent in India

இதனையடுத்து இரண்டாம் இடத்தில் ரூ.9,62,800 கோடியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார் கெளதம் அதானி,

அந்த வகையில் இவரது சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Adani wealth status

அந்த வகையில் இந்தியாவில் உள்ள முதல் 100 பணக்காரர்களின் சொத்துமதிப்பு நடப்பாண்டில் மட்டும் சுமார் 83 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டை ஒப்பிடும் போது அவர்களின் சொத்து மதிப்பு 40 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. Ambani – Adani wealth status

தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு !

இவ்வாறு இவர்களின் சொத்து மதிப்பு உயர இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் சுமார் 30 சதவிகிதம் உயர்ந்ததுதான் முக்கிய காரணம் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. 100 richest people wealth status 40% increase

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *