முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன் வெற்றி - தேர்தல் முடிவுகளில் அதிர்ச்சி!முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன் வெற்றி - தேர்தல் முடிவுகளில் அதிர்ச்சி!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன் வெற்றி: தற்போது எந்த சோசியல் மீடியா பக்கம் சென்றாலும் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து தான் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இந்த முறையும் மோடி தான் பிரதமராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தேர்தலில் எதிர்பாராத விதமாக சில வேட்பாளர்கள் வெற்றியை நிலைநாட்டி உள்ளனர். அந்த வகையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொலை செய்த வாரிசு வெற்றி பெற்றது தான் தற்போது பேசும் பொருளாக இருந்து வருகிறது.

அதாவது பஞ்சாப் மாநில ஃபரித் கோட்டில்   மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை கொலை செய்த இருவரில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன் தான் சரப்ஜித் சிங் சுயேட்சையாக போட்டியிட்டு உள்ளார். அவருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் கரம்ஜித் சிங் அன்மோல் போட்டியிட்ட நிலையில் கிட்டத்தட்ட 70,000 வாக்குகள் வித்தியாசத்தில்  சரப்ஜீத் சிங் கல்சா வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக அவர் தேர்தல் பரப்புரையின் போது, சீக்கிய வேதமான குரு கிரந்த் சாகிப் இழிவுபடுத்தப்பட்ட 2015 படுகொலை சம்பவங்கள் பற்றிய பிரச்சினையை எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. lok sabha election 2024 – election news 2024 – parliamentary election 2024 news – india election – tamilnadu election news update

வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி? வெளியான ஷாக்கிங் நியூஸ்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *