இனி வீடு கட்ட அரசு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை -  தமிழக அரசு கொண்டு வந்த சூப்பர் திட்டம்!!இனி வீடு கட்ட அரசு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை -  தமிழக அரசு கொண்டு வந்த சூப்பர் திட்டம்!!

Breaking News: இனி வீடு கட்ட அரசு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை: இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான இளைஞர்களின் பெரிய கனவாக இருப்பது தனக்கென்று ஒரு சொந்த வீடு கட்டமுடியாத என்று தான். ஆனால் அதில் சிலருக்கு வெறும் கனவாகவே இருந்து வருகிறது. அதிலும் பல தடைகளை மீறி ஒருவர் வீடு கட்ட தயாரான போதிலும் அதற்கான கட்டிட அனுமதி பெற அரசு அலுவலகங்களுக்கு நாய் போல் அலைந்து திரிய வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.

இப்படி இருக்கையில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் தாங்கள் கட்ட இருக்கும் வீட்டுக்காக கட்டட அனுமதி பெற தமிழக அரசு ஒரு வழியை வகுத்துள்ளது. அதாவது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் 3500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் வீடுகளுக்கான கட்டட அனுமதியை  உடனடியாகி பெற  https://www.onlineppa.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். tamil nadu govt

இதனை தொடர்ந்து விண்ணப்பதாரரின் விவரங்கள் அடிப்படையில் அனுமதி உடனடியாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்காக எந்த அரசு அலுவலகங்களுக்கும் நீங்கள் அலையத் தேவையில்லை.

இதையடுத்து ஆன்லைன் அனுமதி பெற்ற விண்ணப்பதாரரின்  கட்டிட பணிகள் முடிந்ததும், முடிவு சான்று வாங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. house online

Also Read: மத்திய பிரதேசத்தில் ரீல்ஸ் எடுத்த மாணவன் உயிரிழப்பு – அடக்கடவுளே… இப்படி கூட சாவு வருமா?

அதுமட்டுமின்றி இதற்கு பரிசீலனை கட்டணம், கட்டமைப்பு, வசதி கட்டணங்களில் இருந்தும் 100 விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் மூலம் நடுத்தர மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. tamilnadu government

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *