எல்லாம் "மஞ்சுமெல் பாய்ஸ்" படத்தோட Effect தான்.., குணா குகைக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள்., வனத்துறையினர் அதிரடி கைது!!எல்லாம் "மஞ்சுமெல் பாய்ஸ்" படத்தோட Effect தான்.., குணா குகைக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள்., வனத்துறையினர் அதிரடி கைது!!

“மஞ்சுமெல் பாய்ஸ்”

தற்போது சமூக வலைத்தளங்களில் எங்கு சென்றாலும் ஒரு படத்தை பற்றி தான் மக்கள் பேசி வருகிறார்கள். உண்மை சம்பவத்தை அடிப்படையாக எடுத்து ரசிகர்கள் பார்வையை தன் பக்கம் இழுத்த திரைப்படம் தான் “மஞ்சுமெல் பாய்ஸ்”. குணா குகைக்கு சென்று குழிக்குள் விழுந்த நண்பனை காப்பாற்ற துடிக்கும் சக நண்பனின் உன்னதமான காதலை வெளிப்படையாக காட்டியுள்ளனர். “இது மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது” என்ற வரிகளுக்கு ஏற்ப அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதை தான் இயக்குனர் சிதம்பரம் நண்பர்களுக்குள் இருக்கும் காதலை சுட்டி காட்டியுள்ளார். தற்போது இந்த திரைப்படம் 150 கோடி வசூலித்து இப்பொழுது வரை தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தால் குணா குகையை பார்க்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு சென்று வருகிறது. கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்று குணா குகையை பார்த்து வந்துள்ளனர். மேலும் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக  சமூக ஆர்வலர்களும், காவலர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த விஜய், பரத் மற்றும் ரஞ்சித் ஆகியோர் கட்டுப்பாடுகளை மீறி குணா குகைக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர். இதை பார்த்த வனத்துறையினர் அவர்களை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

கேவலம்.. பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவீங்களா?.., பிக்பாஸ் அனிதா சம்பத்தை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *