இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூர்யா நியமனம் - முழு தகவல் இதோ !இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூர்யா நியமனம் - முழு தகவல் இதோ !

தற்போது இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூர்யா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இலங்கை அரசியல் வரலாற்றில் 3வது பெண் பிரதமர் என்ற பெருமையை ஹரிணி அமரசூரிய பெற்றுள்ளார். Harini Amarasuriya Appointed as Interim Prime Minister of Sri Lanka

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 21ஆம் தேதி சனிக்கிழமை (21.09.2024) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.

அந்த வகையில் இந்த தேர்தலில், ரணில் விக்ரம சிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுரா குமார திசநாயக்க ,

அத்துடன் இலங்கையின் கடைசிக்கட்ட போரின் போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, உள்ளிட்ட 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தேர்தலில் மொத்தம் 75% வாக்குகள் பதிவான நிலையில், வாக்கு எண்ணிக்கையும் அன்றே தொடங்கியது.

இதனையடுத்து இந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

அந்த வகையில் 55.89 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுரா குமார திசநாயக்க, இந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து அனுப்பப்படும் முக்கிய வீரர் – பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

இந்நிலையில் இலங்கை பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தன தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அந்த வகையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இலங்கையின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் இலங்கை அரசியல் வரலாற்றில் 3வது பெண் பிரதமர் என்ற பெருமையை ஹரிணி அமரசூரிய பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *