ஹரியானாவில் பட்டப்பகலில் புதுமண தம்பதி சுட்டுக்கொலை… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்ஹரியானாவில் பட்டப்பகலில் புதுமண தம்பதி சுட்டுக்கொலை… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்

ஹரியானாவில் பட்டப்பகலில் புதுமண தம்பதி சுட்டுக்கொலை: ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹன்சி பகுதியில் இருக்கும் பிரபல பூங்கா ஒன்றில் காதல் கல்யாணம் செய்து கொண்ட புதிய தம்பதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  ஹிசார் மாவட்டம் சுல்தான்பூர் கிராமத்தை சேர்ந்த நபருக்கும், பக்கத்து கிராமம் பாடலை சேர்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் இரண்டு மாதங்கள் முன்பு  திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களின் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில்  இன்று காலை ஹன்சி பகுதியில் இருக்கும் பிரபல பூங்கா ஒன்றில் அந்த காதல் தம்பதிகள் பேசி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பைக்கில் வந்த  2 மர்ம நபர்கள் அவர்களை சுட்டுக் கொன்று அங்கிருந்து தப்பி ஓடிச்சென்றனர். இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அங்கிருந்து  7 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை – மஞ்சள் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *