ப்ளூடூத் ஹெட்போனில் பாட்டு கேட்ட நபர் …திடீரென வெடித்து சிதறிய Head Phone - நடந்த விபரீதம்!ப்ளூடூத் ஹெட்போனில் பாட்டு கேட்ட நபர் …திடீரென வெடித்து சிதறிய Head Phone - நடந்த விபரீதம்!

ப்ளூடூத் ஹெட்போனில் பாட்டு கேட்ட நபர்: இன்றைய உலகத்தில் பெரும்பலான மக்கள் ஒரு கையில் மொபைல் போன், மற்றொரு கையில் ப்ளூடூத் ஹெட்போனுடன் தான் இருந்து வருகிறார்கள். சந்தோஷமாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி  ப்ளூடூத் ஹெட்போனில் பாட்டு கேட்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அதீத நேரங்களில் இப்படி ஹெட்போனை பயன்படுத்துவதால் செவிகளுக்கு பிரச்சனை ஏற்படும் என்று தெரிந்தும் யூஸ் செய்து கொண்டு தான் இருக்கிறார்.

ப்ளூடூத் ஹெட்போனில் பாட்டு கேட்ட நபர்

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே இருக்கும் மாத்துக்கண்மாய் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (55) இரவு தனது வீட்டில் ப்ளூடூத் ஹெட்போன் அணிந்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக ஹெட்போன் வெடித்து சிதறியது. இதில் பன்னீர் செல்வத்துக்கு காதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை கைப்பற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவரை தீவிர சிகிச்சை பிரிவின் கீழ் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை தருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. headphone issue – tamilnadu seithikal – india news – madurai news – government hospital

பிளஸ் 2 துணைத்தேர்வு 2024 அட்டவணை வெளியீடு? தமிழகத்தில் எந்தெந்த தேதியில் தேர்வு நடக்க போகிறது தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *