தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!!தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அதற்கு முன்னர் கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், தற்போது கனமழை பெய்து வருவதால் மக்கள் சந்தோஷமாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இன்று மாலை 4 மணி வரை தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான விழுப்புரம், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் கோவை, திருப்பூர், ஈரோடு, சிவகங்கை, நாமக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலையில் எந்தவித மாற்றமும் இல்லாததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல எந்த தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

ஹர்திக் பாண்டியாவுக்கு விரைவில் டைவர்ஸ்? வெளியான ஷாக் தகவல் – பிரியும் அடுத்த பிரபல ஜோடி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *