தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!

Breaking News: தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய கூடும்.

குறிப்பாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி கடலோர பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி இருக்கும் தென்தமிழக கடலோர பகுதிகள் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர்  சூறாவளி காற்று வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

Also Read: துபாயில் 6 வயது சிறுமி அசத்தல் சாதனை – அப்படி என்ன செஞ்சுருக்காங்க தெரியுமா?

மேலும் ஒரு சில பகுதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 – 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். எனவே அடுத்த இரண்டு நாட்களுக்கு  நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் கனமழை வெளுத்து வாங்க போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *