அடுத்தடுத்து உயிரிழந்த சீரியல் நடிகைகள் .., அதுவும் அக்காவும் தங்கச்சியுமா?.., சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை!!அடுத்தடுத்து உயிரிழந்த சீரியல் நடிகைகள் .., அதுவும் அக்காவும் தங்கச்சியுமா?.., சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை!!

உயிரிழந்த சீரியல் நடிகைகள்

வெள்ளித்திரைக்கு இருக்கும் அளவுக்கு தற்போது சின்னத்திரைக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்றே தனி மவுஸ் இருந்து வருகிறது. இந்நிலையில் டிவி சீரியல் நடிகைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹிந்தி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை டோலி சோகி. இவர் ஜனக், களாஷ், ஹபி உள்ளிட்ட இந்தி சீரியல்களில் நடித்துள்ளார். அவருக்கு அமந்தீப் சோகி என்ற சகோதரியும்  இருக்கிறார். இவரும் அக்காவை போல் சீரியல் ஆர்ட்டிஸ்ட் தான். இவர் பெடமீஸ் டில் என்ற சீரியலில் நடித்துள்ளார். இந்நிலையில் அக்கா தங்கச்சி இருவரும் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

அதாவது அக்கா டோலி சோகி மஞ்சள் காமாலை நோயாலும், தங்கச்சி அமந்தீப் சோகி கர்ப்பப்பை புற்று நோயாலும் பாதிக்கப்பட்டு இருந்தனர். மேலும் இருவரும் ஒரே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி தங்கை அமந்தீப் சோகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோகமான சூழ்நிலையில் வெளியே வர முடியாமல் தவித்து வந்த அவரது குடும்பத்தினருக்கு இன்று காலை இன்னொரு இடி தலையில் விழுந்தது. அதாவது இன்று காலை அக்கா டோலி சோகியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இப்படி பாசமலர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவாகரத்து செய்தி உண்மையா?.., நயன்தாரா வெளியிட்ட அடுத்த ஷாக்கிங் போட்டோ?.., குழப்பத்தில் ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *