பிரபல உணவகத்தில் பயங்கர தீ விபத்து.., 43 பேர் உடல் கருகி சாவு., பலர் மருத்துவமனையில் அனுமதி!!பிரபல உணவகத்தில் பயங்கர தீ விபத்து.., 43 பேர் உடல் கருகி சாவு., பலர் மருத்துவமனையில் அனுமதி!!

43 பேர் உடல் கருகி சாவு

சமீப காலமாக தீ விபத்து ஏற்படும் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஏகப்பட்ட மக்கள் உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வங்காள தேசத்தின் தலை நகரமான டாக்காவில் ஒரு 7 மாடிகளை கொண்ட கட்டடத்தில் பலவேறு உணவகங்கள் மற்றும் கடைகள் இயங்கி வருகின்றன. அதன்படி முதல் மாடியில் ஒரு உணவகம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த கடைக்கு தினசரி ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த ஹோட்டலில் திடீரென தீப்பற்றிய நிலையில் கடை முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அந்த ஹோட்டலில் சிக்கி இருந்த 75 பேர் மீட்கப்பட்டனர் அதில், 22 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் அவர்களில் சிலர் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. ஆனால் இதில் சோகமான விஷயம், 33 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 11 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு.., ஆரம்பிக்கும் முன்னரே மாவட்டக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்.., பள்ளி கல்வித்துறை அதிரடி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *