பிரபல ஐடி நிறுவனம் அசத்தல்.., இனி எல்லாரும் முதலாளி தான்.., ஊழியர்களுக்கு கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்!!பிரபல ஐடி நிறுவனம் அசத்தல்.., இனி எல்லாரும் முதலாளி தான்.., ஊழியர்களுக்கு கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்!!

சென்னையில் பிரபல நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வரும் ஐடியாஸ் 2 ஐடி என்ற (Ideas2IT) நிறுவனம், அதிக வருடம் பணியாற்றிய ஊழியர்களை கௌரவிக்கும் விதமாக ஒரு செயலை செய்துள்ளது. அதாவது ஐடியாஸ் 2 ஐடி என்ற (Ideas2IT) நிறுவனத்தின் தலைவர் முரளி தனக்கு கிடைக்கும் வருமானத்தில் 33 சதவீத உரிமைப் பங்கை தருவதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி 5 வருடங்களுக்கு மேலாக  வேலை பார்த்த ஊழியர்களில் 50 பேரை தேர்ந்தெடுத்து, காரை பரிசாக அளித்தது மட்டுமின்றி, முதற் கட்டமாக 38 பேருக்கு 33 % பங்குகளையும் ஒதுக்கி நிறுவனத்தின் பங்குதாரர்களாக மாற்றி அனைவரையும் இந்நிறுவனம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதே போல் கடந்த வருடம் தனது நிறுவனத்தில் வேலை பார்த்த 100 பேருக்கு காரை பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய முரளி, இனிமேல் இங்கு வேலை பார்க்கும் எல்லாரும் முதலாளி தான் என்று கர்வமாக பேசியுள்ளார். 

பிரபல ஐடி நிறுவனம் ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்!!
பிரபல ஐடி நிறுவனம் ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *