பணப்பட்டுவாடா புகார்.., சென்னையில் 5 இடங்களில் ரெய்டு விட்ட வருமான வரித்துறை!!பணப்பட்டுவாடா புகார்.., சென்னையில் 5 இடங்களில் ரெய்டு விட்ட வருமான வரித்துறை!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் வருமான வரித்துறையினருக்கு பணப்பட்டுவாடா குறித்து புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்த தேர்தல், முதலாவதாக தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் வருமான வரித்துறையினருக்கு பணப்பட்டுவாடா குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சென்னையில் 5  இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  அதாவது சென்னையில் ஏழுகிணறு, கொண்டித்தோப்பு சக்கர செட்டி தெருவில் உள்ள இந்து ராம் சவுத்ரி என்பவர் வீட்டிலும்,  ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒரு வீட்டிலும், ரைஸ் மில் சாலையில் உள்ள ஒருவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இப்படி வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுபான கொள்கை விவகாரம்.., திகார் சிறைக்கு செல்லும் டெல்லி முதல்வர்.., நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *