இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பிரதமர் மோடி பெயரில் விண்ணப்பம் - போலியாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழுப்பம் !இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பிரதமர் மோடி பெயரில் விண்ணப்பம் - போலியாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழுப்பம் !

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பிரதமர் மோடி பெயரில் விண்ணப்பம். இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வரும் நிலையில் அவரின் பதவிக்காலம் டி 20 உலகக்கோப்பையுடன் முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு பிறகு பொருத்தமான இந்திய அணியின் பயிற்சியாளராக யாரை தேர்வு செய்யலாம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பி.சி.சி.ஐ தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.

கடந்த மே13ஆம் தேதி முதல் இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் பி.சி.சி.ஐ சார்பில் பெறப்பட்ட நிலையில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, சேவாக் ஆகிய பெயரில் போலியாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழுப்பம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் !

அந்த வகையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் பதிவான விண்ணப்பங்களில் போலி எது, உண்மையான விண்ணப்பங்கள் எது என கண்டறிய தாமதம் ஆகும் எனவும் பி.சி.சி.ஐ தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் கூகுள் பார்ம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் பலர் போலி விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *