RCB-க்கு எதிராக வெற்றியை தொடருமா RR  - வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்ட ராஜஸ்தான் அணி நிர்வாகம்RCB-க்கு எதிராக வெற்றியை தொடருமா RR  - வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்ட ராஜஸ்தான் அணி நிர்வாகம்

ஐபிஎல் சீசனில் இன்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணி மோத இருக்கும் நிலையில், ராஜஸ்தான் அணி நிர்வாகம் ஒரு வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது.

நடப்பாண்டில் IPL சீசனில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூர் அணி மற்றும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் ராஜஸ்தான் அணி இன்று முழு பலத்தையும் வெளிக்காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஒரு வெற்றியுடன் சரிவில் இருந்து வரும் RCB அணி எழுச்சி பெற்று வெற்றி பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டும். மேலும் இந்த போட்டி ராஜஸ்தானில் நடைபெற இருப்பதால் RR அணிக்கு அனுகூலமாக இருக்கும். இந்நிலையில் ராஜஸ்தான் அணி நிர்வாகம் ஒரு வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது.

அதாவது, இன்று நடக்க இருக்கும் ஆட்டத்தில் RCB மற்றும் RR என் இரு அணிகளும் அடிக்கும் ஒவ்வொரு சிக்சருக்கும் ராஜஸ்தானில் உள்ள 6 வீடுகளுக்கு சோலார் வசதி( சூரிய மின் சக்தி மின்சாரம்) செய்து கொடுக்கப்படும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும்  இவ்விரு அணியும் IPL சீசனில் கிட்டத்தட்ட 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. அதில் பெங்களூர் அணி 15 முறையும், ராஜஸ்தான் 12 முறையும் வென்று உள்ளனர். மேலும் இரண்டு ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. எனவே இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றியை ருசிக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். 

மும்பை அணியில் இணையும் சூர்யகுமார் யாதவ்? – அப்படி போடு.., சிங்கம் சிங்கம் களம் இறங்கிடுச்சு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *