ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி - அதிர்ச்சி குற்றச்சாட்டு?ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி - அதிர்ச்சி குற்றச்சாட்டு?

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை டைவர்ஸ் செய்த நிலையில், தற்போது அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக இருந்து வருகிறார் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் பிரதர். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து படங்கள் கைவசம் வைத்துள்ளார். இப்படி இருக்கையில் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக பரபரப்பு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

ஆனால் அதற்கு அவருடைய மனைவி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜெயம் ரவி நீதிமன்றத்தை நாடிய சம்பவம் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் அவர் பிரபல பாடகி ஒருவருடன் டேட் செய்து வருவதாக சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

Also Read: 10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்.. வெளியான தரமான அப்டேட்!

இதற்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது தனது மனைவி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறார். அதாவது, சென்னை ECR ரோட்டில் இருக்கும் ஆர்த்தியின் வீட்டில் இருந்து தான் வெளியே வந்து விட்ட நிலையில், தன்னுடைய உடமைகளை மீட்டுத் தரும்படி அவர் கேட்டிருக்கிறார். இதை வைத்து பார்க்கும் பொழுது, அவர்களுக்குள் மிகப்பெரிய பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ

இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?

எந்த ஒரு கெட்ட பழக்கம் இல்லாமல் வாழும் 6 ஹீரோக்கள்

மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *