ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் - உருவாகிறது அதிமுக ஒருங்கிணைப்பு குழு !ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் - உருவாகிறது அதிமுக ஒருங்கிணைப்பு குழு !

ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல். தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து ஜேசிடி பிரபாகர் மற்றும் புகழேந்தி ஆகியோர் விலகுவதாக கூட்டாக அறிவிப்பு

அதிமுக கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் ஜேசிடி பிரபாகர் மற்றும் புகழேந்தி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வந்தனர்.

அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினர் ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜேசிடி பிரபாகர் மற்றும் புகழேந்தி ஆகியோர் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகுவதாக கூட்டாக அறிவித்துள்ளனர். மேலும் இவர்கள் கே.சி. பழனிச்சாமியுடன் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற குழுவை தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் இந்த ஒருங்கிணைப்பு குழுவானது ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிமுகவை ஒருங்கிணைக்க பாடுபடும் என்று தெரிவித்துள்ளனர்.

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் – விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் !

மேலும் தற்போது நடைபெற்ற தேர்தல் தோல்வியை குறிப்பிட்டு அதிமுக இதுவரை இது போன்ற தோல்வியை சந்தித்தில்லை என்றும் நாம் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *