ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 16 பேர்களின் நிலை கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை !ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 16 பேர்களின் நிலை கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை !

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 16 பேர்களின் நிலை கவலைக்கிடம் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிப்படைந்தவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 நோயாளிகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM ஆய்வு – தேர்தல் ஆணையம் உத்தரவு !

அத்துடன் 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர் என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *