வாக்கு சேகரிக்க வந்த அமைச்சரிடம் மகளிர் உரிமை தொகை கேட்டு பெண் புகார் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் உரிமை தொகை:
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடந்த வருடம் தொடங்கிய வைத்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம், தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெரும்பாலான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் சேர விருப்பமுள்ள பெண்கள் மேல் முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்த நிலையில், பெண்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகிறார். தற்போது நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு கட்சி தலைவர்கள் மக்களின் வாக்குகளை பெற நேரடியாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இது ஒரு பக்கம் இருக்கையில், இந்த சம்பார்த்ததை பயன்படுத்தி ஒரு பெண் ஒட்டு கேட்க வந்த அமைச்சரை வழிமறித்து, தனக்கு இன்னும் மகளிர் உரிமை தொகை வழங்கவில்லை என்று புகார் கொடுத்தார். இதை கேட்ட அமைச்சர் உடனடியாக இது தொடர்பான மேல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஜூன் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை கிடைக்க வழிவகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், அமைச்சரிடம் கூறினால் மகளிர் உரிமை தொகை பணம் கிடைக்குமோ? என்று குடும்ப தலைவிகள் யோசித்து வருகின்றனர்.