பூதாகரமாக வெடிக்கும் கள்ளச்சாராயம் விவகாரம்: முக்கிய குற்றவாளியை கைது செய்த காவல்துறை!!பூதாகரமாக வெடிக்கும் கள்ளச்சாராயம் விவகாரம்: முக்கிய குற்றவாளியை கைது செய்த காவல்துறை!!

kallakurichi issue: பூதாகரமாக வெடிக்கும் கள்ளச்சாராயம் விவகாரம்: தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் செய்தி என்றால் கள்ளக்குறிச்சியில்1 நடந்த கோர சம்பவத்தை பற்றி தான். கள்ளசாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுவரை 47 உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 90-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தவெக கட்சி தலைவர் விஜய்2 முதல் பல்வேறு கட்சி அமைப்பினர் நேரில் சென்று தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அதிமுகவினர் இன்று நடந்த சட்டப்பேரவையில் கருப்பு சட்டை அணிந்து அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையை ஆக்கிரமித்து அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேறியுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு முக்கிய குற்றவாளியாக இருக்கும் சின்னதுரை என்பவர் கடலூரில் பதுங்கியிருந்த  நிலையில் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டி, தாமோதரன், விஜயா ஆகிய மூவரும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்து வருகின்றனர். tamilnadu news – tamilnadu state latest news –

  1. kallakurichi issue latest update ↩︎
  2. tvk party captain vijay news ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *