"குணா" படத்துக்கு பின்னாடி இருக்கும் மர்மம்.., படத்தோட உண்மையான இயக்குனர் இவரா?.., மர்ம முடிச்சை அவிழ்த்த பிரபலம்?"குணா" படத்துக்கு பின்னாடி இருக்கும் மர்மம்.., படத்தோட உண்மையான இயக்குனர் இவரா?.., மர்ம முடிச்சை அவிழ்த்த பிரபலம்?

“குணா” படத்தோட இயக்குனர் இவரா?

தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் திரைப்படம் என்றால் அது “மஞ்சும்மல் பாய்ஸ்” தான். இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் 32 ஆண்டுகளுக்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான குணா திரைப்படம் தான் காரணம். இப்பொழுது இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், குணா படத்துக்கு பின்னாடி மறைந்திருந்த ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது, அவ்வாறு தற்போது குணா படத்தின் ஒளிப்பதிவாளர் வேணு கூறியது அனைவரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த படத்தோட இயக்குனர் என்று கூறப்படும் சந்தான பாரதி சமீபத்தில் நடந்த பேட்டியில் குணா குகை எந்த அளவுக்கு ஆபத்து என்று எங்களுக்கு தெரியாது. இப்பொழுது இந்த படம் வந்த பிறகுதான் இப்படி ஒரு மர்மம் இருக்கிறது என்று தெரிய  வந்தது.

இது குறித்து வேணு பேசுகையில், அவர் குணா படத்தோட இயக்குனரே கிடையாதே, அவர் பாதி நாட்கள் ஷூட்டிங்கிற்கே வரவில்லை. அவர் வரவில்லை என்றாலும் கமல் பயப்படவில்லை. அவரே அந்த படத்தை எடுத்து ஹிட் கொடுத்தார். அப்புறம் எப்படி அவருக்கு அந்த இடம் ஆபத்து என்று தெரிய போகிறது என்று கூறியுள்ளார். அப்போ படத்தை கமல் தான் எடுத்துள்ளார் போல என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இது போன்று பல படங்களில் கமல் இயக்கி மறைமுகமாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது ‘அன்பே சிவம்” படத்தில் இறுதியில் சந்தான பாரதியிடம் “உங்க பொழப்ப கெடுக்க மாட்டேன் சார் பொழச்சு போங்க” என்று கமல் கூறும் வசனம் தான் தற்போது நியாபகத்திற்கு வருகிறது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *