நடிகர் தர்ஷன் கர்நாடகா பெல்லாரி சிறைக்கு மாற்றம் - ஜெயிலில் சொகுசாக இருந்த வீடியோவால் வந்த வினை!நடிகர் தர்ஷன் கர்நாடகா பெல்லாரி சிறைக்கு மாற்றம் - ஜெயிலில் சொகுசாக இருந்த வீடியோவால் வந்த வினை!

நடிகர் தர்ஷன் கர்நாடகா பெல்லாரி சிறைக்கு மாற்றம்: பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது பெண் தோழிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதால்  ரேணுகா சாமி என்ற தனது ரசிகரை கடத்தி சென்று கொலை செய்த குற்றத்திற்காக சமீபத்தில் கைது செய்யபட்டார். அவரோடு சேர்த்து அந்த பெண் தோழி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

நடிகர் தர்ஷன் கர்நாடகா பெல்லாரி சிறைக்கு மாற்றம்

இதனை தொடர்ந்து கொலை செய்த குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் ஜெயிலில் சிகரெட், வீடியோ கால் என சொகுசாக இருந்து வந்துள்ளார். இது குறித்து போட்டோ, வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் கண்டனம் தெரிவிக்க தொடங்கினர்.

போலீஸ் உதவி இல்லாமல் இந்த மாதிரி அவர் நடந்திருக்க மாட்டார் என்று மக்கள் குரல் எழுப்பிய நிலையில், 7 சிறை அதிகாரிகளை அரசு சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில் நடிகர் தர்ஷன் குறித்த முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

Also Read: மலையாள நடிகர் முகேஷ் MLA தலைமறைவு – போலீஸ் வலைவீச்சு – எதற்கு தெரியுமா?

இதனை தொடர்ந்து அவரை வேறு ஒரு சிறைக்கு அனுப்ப மாற்ற 24 வது கூடுதல் முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆக.27ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி தற்போது நடிகர் தர்ஷனை பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த தர்ஷன் இன்று அதிகாலை 4 மணி அளவில் வட கர்நாடகாவில் உள்ள பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு இது போன்று சொகு வாழ்க்கை கிடைப்பது கடினம் என கூறப்படுகிறது. kannada actor darshan murder case

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

மக்களே ஜாக்கிரதை – AC மூலம்  பரவும் உயிர்கொல்லி நோய் 

கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *