காதல் கோட்டை பாணியில் காதலித்த இளைஞர் - நேரில் பார்த்ததும் காதலியை தாக்கிய சம்பவம் - என்ன நடந்தது?காதல் கோட்டை பாணியில் காதலித்த இளைஞர் - நேரில் பார்த்ததும் காதலியை தாக்கிய சம்பவம் - என்ன நடந்தது?

காதல் கோட்டை பாணியில் காதலித்த இளைஞர்: தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் இன்ஸ்டாகிராமில் மூழ்கி இருந்து வருகின்றனர். அந்த இன்ஸ்டகிராம் மூலம் ஒரு வாலிபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த திபேந்திரா சிங் (20) என்ற இளைஞர்  இன்ஸ்டாகிராமில் ஒரு இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் முகப்பில் 20 வயது  அழகிய போட்டாவை  வைத்திருந்தார். அதை பார்த்த அந்த இளைஞருக்கு பிடித்து போக நெருங்கி பேசி பழகி வந்துள்ளனர்.

காதல் கோட்டை பாணியில் காதலித்த இளைஞர்

காதல் கோட்டை படத்தில் அஜித்தும் தேவயானியும் பார்க்காமல் காதலித்து வந்ததை போல் இவர்களும் பார்க்காமலே காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்த நிலையில், இதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த இளைஞர் காத்து கொண்டிருந்தார். அப்போது அவரை உற்று நோக்கி 45 வயது தக்க ஒரு பெண் பார்த்து கொண்டு அந்த இளைஞர் பக்கம் நகர்ந்து வந்துள்ளார். அதை பார்த்த இளைஞர் யார் நீங்கள் என்று கேட்க? உங்களிடம் இன்ஸ்டாவில் பேசியது நான் தான் என்று அதிர்ச்சி அளித்துள்ளார். இதனால் கடும்  கோபத்திற்கு ஆளான  தீபேந்திரா அந்த பெண்ணை தாக்கி மொபைல் போனையும் பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்ததை அடுத்து திபேந்திரா சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.      

ஆர் ஓ வாட்டர் பியூரிஃபையரை இந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டாம் – வெளியான ஷாக்கிங் நியூஸ்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *