கன்னியாகுமரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் நுழைந்த நபர் - வளைத்து பிடித்த காவல்துறை!!கன்னியாகுமரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் நுழைந்த நபர் - வளைத்து பிடித்த காவல்துறை!!

கன்னியாகுமரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் நுழைந்த நபர்: நாட்டில் தற்போது நடந்து முடிந்த 18வது பாராளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று களைகட்டி வருகிறது. தொடர்ந்து தமிழகத்தில் திமுக கட்சி முன்னிலையில் வகித்து வருகிறது. அதேபோல் தேசிய அளவில் NDA பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இருப்பினும் மாலை 4 மணிக்கு மேல் தான் செங்கோட்டை யாருக்கு என்று தீர்மானம் செய்யப்படும். இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வயதான சீக்கியர் ஒருவர் உறையில் சொருகப்பட்ட கத்தியுடன் சென்றுள்ளார். அதை பார்த்த காவல்துறை அவரை வளைத்து பிடித்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அந்த வாக்கு மையத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இந்த இடைப்பட்ட நேரத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்றும் காவல்துறை விசாரணை செய்து வருகிறது. மேலும் கன்னியாகுமரி தொகுதியில் தற்போது வசந்தம் அண்ட் கோ உரிமையாளர் விஜய் வசந்த் முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 – LIVE UPDATE… எந்த கட்சி முன்னிலையில் இருக்கு தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *