காரைக்காலில் ஜூன் 21 ஆம்தேதி மாங்கனி திருவிழா - உள்ளூர் விடுமுறை அளிக்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு !காரைக்காலில் ஜூன் 21 ஆம்தேதி மாங்கனி திருவிழா - உள்ளூர் விடுமுறை அளிக்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு !

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஜூன் 21 ஆம்தேதி மாங்கனி திருவிழா நடைபெறுவதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அத்துடன் மாங்கனி திருவிழாவின் போது புதுச்சேரி மற்றும் காரைக்கால் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்களும் காரைக்கால் அம்மையார் ஆலயத்திற்கு வந்து வழிபடுவது வழக்கம்.

இதனை தொடர்ந்து மாங்கனி திருவிழாவின் போது பக்தர்கள் ஏராளமான மாங்கனிகளை இரைத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

அந்த வகையில் காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் இந்த ஆண்டு மாங்கனி திருவிழா வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.

அரசுப்பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்கள் பயணம் செய்ய 50% கட்டணச்சலுகை – அமைச்சர் சிவசங்கர் அறிக்கை !

இதனையடுத்து காரைக்காலில் உள்ளூர் விடுமுறை அளிக்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *