கர்நாடகாவில் 25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை - ஆச்சரியத்துடன் பார்த்த மருத்துவர்கள்!!கர்நாடகாவில் 25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை - ஆச்சரியத்துடன் பார்த்த மருத்துவர்கள்!!

Breaking News: கர்நாடகாவில் 25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை: இன்றைய நவீன உலகத்தில் ஆச்சரியப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அவ்வகையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் ஒரு அதிசய குழந்தை பிறந்துள்ளது. அதாவது கர்நாடக மாநிலம், கொன்னூர் பகுதியை சேர்ந்தவர் தான் பாரதி (35).

இவர் தற்போது கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் பிரசவத்திற்காக ராபகவி டவுனில் இருக்கும் தனியார் hospital-ல் அனுமதிக்கப்பட்டார். இப்படி இருக்கையில் இன்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், பாரதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை பார்த்து பிரசவம் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி ஆச்சரியத்தில் மூழ்கினர். colic baby

அதாவது பாரதிக்கு பிறந்த குழந்தைக்கு மொத்தம் 25 விரல்கள் இருந்துள்ளது. தெளிவாக சொல்ல போனால் அக்குழந்தைக்கு இடது கையில் 7 விரல்களும், வலது கையில் 7 விரல்களும் மற்றும்  இரு கால்களிலும் தலா 6 விரல்களும் இருந்துள்ளது. இப்படி அற்புதமாக பிறந்த அந்த குழந்தையை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வந்தனர். formula

Also Read: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி – ICUவில் தீவிர சிகிச்சை –  ஜாமீன் கிடைக்குமா?

இதுகுறித்து பிரசவம் பார்த்த மருத்துவர்கள் கூறுகையில், “பாரதியின் ஆண் குழந்தைக்கு கிட்டத்தட்ட 25 விரல்கள் இருக்கிறது. மற்றபடி குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை. குழந்தை உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. மேலும் விரல்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் நாம் பயப்பட தேவையில்லை” என்று தெரிவித்துள்ளனர். Miracle child

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *