தேர்வு எழுத போன 3 மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்.., 24 வயது வாலிபரின் வெறிச்செயல்.., என்ன நடந்தது?தேர்வு எழுத போன 3 மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்.., 24 வயது வாலிபரின் வெறிச்செயல்.., என்ன நடந்தது?

மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்

உலக நாடுகளில் பாலியல், திருட்டு, கொலை உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு அரசு கடுமையான தண்டனைகளை கொண்டு வந்த போதிலும் குற்றங்கள் தீர்ந்த பாடில்லை. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் தேர்வு எழுத போன மாணவிக்கு இளைஞன் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் பியூசி பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அந்த தேர்வை எழுத்துவதற்காக மூன்று மாணவிகள் கல்லூரி வளாகத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது முகமுடி அணிந்து, தலையில் தொப்பியுடன் ஒரு மர்ம நபர் உள்ளே நுழைந்து, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு பெண் முகத்தில் ஆசிட் அடித்துள்ளார். அப்போது அருகில் இருந்து இன்னும் இரண்டு மாணவிகள் ,மீது ஆசிட் பட மூவரும் துடிதுடித்து கத்த ஆரம்பித்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த நபரை அங்கிருந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் சேர்ந்து அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அப்போது காவல்துறை விசாரித்த நிலையில், ஆசிட் வீசிய நபர் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் பெயர் அபின் (23) என்றும்தெரிய வந்தது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் இவர் பகுதியை சேர்நதவர் எனறும் அதனால் காதல் விவகாரத்தால் தான் அந்த இளைஞன் இப்படி செய்திருப்பான் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

ஓரமாக நின்று கொண்டிருந்த ரயிலில் திடீர் தீவிபத்து… 4 பெட்டிகளில் அடுத்தடுத்து பரவிய நெருப்பு.., போலீஸ் விசாரணை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *