வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் - கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் !வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் - கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் !

கேரளா வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் தொடர்பான சம்பவத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் வயநாடு, முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அங்கு பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து இதுவரை 231 உடல்களும், 206 உடல் பாகங்களும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.

அந்த வகையில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதலவர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

மேலும் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்து உடனடியாக நிவாரணத் தொகைகளை வழங்க மத்திய அரசிடன் கேரள அரசு கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் வயநாடு நிலச்சரிவிற்கு வங்கிக் கணக்கின் வழியே வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில் வங்கிகள் EMI பிடித்தம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் நிவாரண நிதியில் இருந்து EMI யை தானாக கழிக்கப்பட்டதிற்கு வங்கிகளை கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம் செய்தார்

இந்த சம்பவம் தொடர்பாக மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் நிலச்சரிவால் பாதித்த பகுதிகளில் வட்டித் தொகையில் தளர்வு அல்லது மாதாந்திர தவணை செலுத்துவதற்கான கால நீட்டிப்பு போன்றவை தீர்வாக இருக்காது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி அறிமுக விழா – பனையூரில் கொடிக்கம்பம் ரெடி – 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ப்பு !

அத்துடன் கடன்களை தள்ளுபடி செய்வதால் வங்கிகள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தாது என்றும் கடனைப் பெற்றவர்களில் பலர் இறந்துவிட்டனர். மேலும் அவர்களது வீடுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்வதே சரியான தீர்வாக இருக்கும் என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *