மந்திர சக்தியில் நம்பிக்கை - தோழியுடன் தற்கொலை செய்து கொண்ட தம்பதி - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!மந்திர சக்தியில் நம்பிக்கை - தோழியுடன் தற்கொலை செய்து கொண்ட தம்பதி - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

கேரள தம்பதி தனது தோழியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் ஆயுர்வேத மருத்துவர்களாக நவீன் தாமசும், அவருடைய மனைவி தேவியும் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரும், தங்களுக்கு நெருங்கிய தோழியான ஆர்யா நாயர் என்பவருடன் சேர்ந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள்  சுற்றுலா சென்றிருப்பதாக அவர்களுடைய உறவினர்கள் நினைத்திருந்த நிலையில், அவர்களது நோக்கம் வேறு மாதிரியாக இருந்துள்ளது என்று அந்த நாளுக்கு அப்புறம் தான் தெரிய வந்துள்ளது. அதாவது அந்த மூவரும் அருணாசல பிரதேசத்தின் ஜீரோ என்ற பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். ரூமுக்குள் போனதோடு சரி, இதையடுத்து இரண்டு நாட்கள் அவர்கள் வெளியே வரவில்லை. இதனால் பதற்றமான ஹோட்டல் ஊழியர்கள் போலீஸ் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது மூவரும் ரத்த கரையுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அங்கு அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் இருந்துள்ளது.

அதில் ‘எங்களுக்கு கடன் இல்லை. எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. நாங்கள் எந்த இடத்திற்கு செல்ல விரும்புகிறோமோ அங்கு செல்கிறோம்’ என்று எழுதப்பட்டு மூவரின் கையெழுத்தும் போடப்பட்டிருந்தது. மேலும் நவீன், லேப்டாப்பை வைத்து போலீஸ் விசாரணையை தொடங்கிய நிலையில், மூவருக்கும் மந்திர சக்தியில் நம்பிக்கை கொண்டிருப்பதும், அதை பெறுவதற்காக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதும் தெரியவந்தது. மேலும் இன்னும் சில வருடங்களில் பூமியில் இருந்து பால்வழி மண்டலத்துக்கு மனிதர்கள், விலங்குகள் போக இருப்பதாக ஏலியன் கூறியதாக அவர்களே நினைத்துக் கொண்டனர். அதுமட்டுமின்றி பெயர் இல்லாத மெயில்கள் அதிகமாக அவரது மெயில்களுக்கு வந்துள்ளது. இதனால் இந்த சம்பவத்துக்கு பின்னாடி பெரிய நெட்வொர்க் இருக்கும் என்று போலீஸ் விசாரித்து வருகிறது. 

மதுபிரியர்களே குட் நியூஸ் – டாஸ்மாக் கடையில் குறைந்த விலையில் மது விற்பனை – வெளியான முக்கிய தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *