"மஞ்சும்மல் பாய்ஸ்" தயாரிப்பாளர் மீது புகார் - பொய்யான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - கேரள தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!!"மஞ்சும்மல் பாய்ஸ்" தயாரிப்பாளர் மீது புகார் - பொய்யான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - கேரள தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!!

சமீபத்தில் வெளியான “மஞ்சும்மல் பாய்ஸ்” தயாரிப்பாளர் மீது புகார்: மலையாள இயக்குனர் சிதம்பரம் எஸ் பொடுவல் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் “மஞ்சும்மல் பாய்ஸ்1. இப்படம் மலையாளத்தை விட தமிழ் ரசிகர்களை தான் அதிகம் ஈர்த்தது என்று சொல்லலாம். ஓடிடியிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து இப்படம் கடந்த சில வாரங்களாக சர்ச்சையில் சிக்கி வருகிறது. சமீபத்தில் கூட சவுபின் ஷாயிரின் என்பவர், “மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் 7 கோடி முதலீடு செய்ததாகவும், படத்தின் லாபத்தில் பாதி தருவதாக தயாரிப்பாளர் கூறி இருந்ததாகவும், ஆனால்  சொன்னபடி உரிய லாபத்தை கொடுக்கவில்லை” என்றும்  தயாரிப்பாளர் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள், மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் கேரள தயாரிப்பாளர் சங்கம் ஒரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ” பல்க் புக்கிங் செய்து, ரசிகர்களை கவர பொய்யான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

Also Read: இந்தியன் 2 படத்தை வெளியிட  தடையா? கமலுக்கு எழுந்த புதிய சிக்கல்… அதிர்ச்சியில் படக்குழு!

மேலும் வெறும் பணத்திற்காக படத்தை குறித்து பொய்யான திரைவிமர்சனங்களை கூறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி வசூலை அதிகமாக காட்டி ஒட்டுமொத்த திரைப்பட துறைக்கும் தீங்கு விளைவிக்கும் ஆரோக்கியமற்ற நடைமுறையில் ஈடுபட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளனர்.

  1. manjummel boys movie latest update ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *