சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு அறிவிப்பு - தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதி !சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு அறிவிப்பு - தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதி !

கேரளா சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு அறிவிப்பு, மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறந்திருக்கும். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் அதிக நாட்கள் திறக்கப்பட்டிருக்கும். அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் வரை நடை திறந்திருக்கும்.

இதனை தொடர்ந்து ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும் என்று சபரிமலை தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன் ? – வானிலை ஆய்வு மையம் விளக்கம் !

இதனையடுத்து அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு நடை சாத்தப்படும். அது மட்டுமின்றி புதிய மேல்சாந்திகள் தேர்வு நாளை (17-ந்தேதி) நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *