கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை!கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை!

கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: தமிழகத்தில் கோடை கால மழை பல்வேறு பகுதிகளில் பொழிந்து வருகிறது. குறிப்பாக தென்காசி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கிருக்கும் குட்டைகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக குத்தாலம் பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்திய வானிலை மையம் ஆரஞ்சு முதல் ரெட் அலர்ட் வரை கொடுத்து மக்களை எச்சரித்து வருகிறது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கேரளாவில் அடுத்த  இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும். இதனால் கேரள பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. weather report news – kerala news – tamilnadu news – கேரளாவில் ஆரஞ்சு அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை

வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை – கடைசியாக அவர் பேசிய வீடியோ வெளியீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *