கிருஷ்ணகிரி போலி NCC முகாம் விவகாரம் – மேலும் ஒரு முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!கிருஷ்ணகிரி போலி NCC முகாம் விவகாரம் – மேலும் ஒரு முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!

கிருஷ்ணகிரி போலி NCC முகாம் விவகாரம்: சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அனைவரது மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விஷயம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி போலி NCC முகாம் விவகாரம்

அவரை தொடர்ந்து காவல்துறை விசாரணை செய்து வந்த நிலையில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்த நிலையில் அப்பள்ளியின் முதல்வர் உட்பட 15 பேர் காவல்துறை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த பாலியல் வழக்கு தொடர்பாக தற்போது மாவட்ட என்சிசி ஒருங்கிணைப்பாளர் கோபு (42) என்பவரை சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதாவது சிவராமன் நடத்திய போலி முகாம்கள் குறித்து தெரிந்திருந்தும் அதற்கு துணையாக இருந்துள்ளார். naam tamilar party

Also Read: தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது – தலைவர் விஜய் தரப்பில் பதில்!

மேலும் சிவராமன் நண்பன் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கருணாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளியான மறைந்த சிவராமனின் சிசிடிவி காட்சிகளின் HARD DISK ஐ எரித்ததற்காக சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.krishnagiri fake ncc case issue

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு

PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்

குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்

HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *