6 பவுன் தங்க சங்கிலி தருவதாக கூறிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி ! யார் யாருக்கு தெரியுமா ? - முழு தகவல் இதோ !6 பவுன் தங்க சங்கிலி தருவதாக கூறிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி ! யார் யாருக்கு தெரியுமா ? - முழு தகவல் இதோ !

6 பவுன் தங்க சங்கிலி தருவதாக கூறிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி. மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணியமைத்து தேர்தலை சந்திக்கின்றனர் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்து களம் காண்கிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறிய கருத்தால் திமுக கட்சியை சேர்ந்தவர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மகளிருக்கு வழங்கும் உரிமை தொகையை திமுக அரசு எப்போது வேண்டுமானாலும் நிறுத்தும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

இது என்னடா ஓபிஎஸ்க்கு வந்த சோதனை.., ஒரே தொகுதியில் 5 ஓபிஎஸ் போட்டி.., குழப்பத்தில் ராமநாதபுரம் வாக்காளர்கள்!!

மேலும் ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூரில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதிகளிலும் அதிக வாக்குகளை பெற்று தரும் மாவட்ட செயலாளர்களுக்கு தனது சொந்த செலவில் 6 பவுன் தங்க சங்கிலியை பரிசாக வழங்குவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *