மதுரை சித்திரை திருவிழா: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு தேதி மாற்றம்.., முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!மதுரை சித்திரை திருவிழா: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு தேதி மாற்றம்.., முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!

மதுரை மாவட்டம் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கிடையே தற்போது நாடு முழுவதும் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரைக்கான இறுதி தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஏப்ரல் 23-ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெற இருந்த நிலையில், தேதியை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. மதுரையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் என்றும் மதுரை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திலும் மதுரை சித்திரை திருவிழா அழகர் வைகை எழுந்தருளும் விழாவை முன்னிட்டு ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருந்த  சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் என்றும் மதுரை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களே – பொறியியல் படிப்பிற்கு 20% கட்டண உயர்வு.., தனியார் கல்லூரிகள் எடுத்த அதிரடி முடிவு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *