மதுரை நாதக கட்சி நிர்வாகி கொலை வழக்கு - 4 பேர் அதிரடி கைது - விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!மதுரை நாதக கட்சி நிர்வாகி கொலை வழக்கு - 4 பேர் அதிரடி கைது - விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

Breaking News: மதுரை நாதக கட்சி நிர்வாகி கொலை வழக்கு: மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவரும் நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச் செயலாளருமான பாலசுப்ரமணியன் நேற்று அதிகாலை 6.30 மணி அளவில்  நடை பயிற்சி மேற்கொண்ட போது சில மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மதுரையை உலுக்கிய நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டதற்கான மோட்டிவ் என்ன என்று போலீஸ் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.

மேலும் கொலை செய்த குற்றவாளிகளை தொடர்ந்து தேடி வந்த நிலையில், தற்போது இது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது,  மகாலிங்கம் என்பவருக்கும் அவரது தம்பி மருமகன் பாண்டியராஜன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களாக சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதற்கிடையில் பாண்டியராஜனின் சகோதரரும் நாதக நிர்வாகியாக செயல்பட்டு வந்தவருமான  பாலசுப்ரமணியனுக்கு மகாலிங்கத்திடம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாண்டியராஜனும், பாலசுப்ரமணியனும் சேர்ந்து மகாலிங்கத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை – ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? – மக்கள் அவதி!

இதை எப்படியோ தெரிந்து கொண்ட மகாலிங்கம் தன்னிடம் லோடு மேன்களாக வேலை பணியாற்றி வந்த பரத், கோகுலகண்ணன், பென்னி மற்றும் ஒரு சிறுவன் என 4 பேரை கொண்ட கும்பலை வைத்து பாலமுருகனை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த நான்கு பேரை காவல்துறை கைது செய்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *