மதுரையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை - பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !மதுரையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை - பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

தற்போது மதுரையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை, தமிழ்நாட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போது போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

அத்துடன் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக எதிர் கட்சியினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சியினர் எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். மேலும் இவர் நாம் தமிழர் கட்சியில் மதுரை மாவட்ட வடக்கு தொகுதி துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று இவர் வழக்கம் போல் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாலசுப்பிரமணியம் ஓடி ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம் – ஒரு தொழிலதிபரின் விருப்பப்படி நடந்ததா? – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இதனை தொடர்ந்து இந்த படுகொலை சம்பவமானது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *