தேர்தல் பிரச்சாரத்தில் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!தேர்தல் பிரச்சாரத்தில் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

தேர்தல் பிரச்சாரத்தில் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி: தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் சர்ச்சை நாயகனுமான மன்சூர் அலிகான் தற்போது நடக்கவிருக்கும் மக்களவை தேர்தல் வேலூரில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இன்னும் இரண்டு நாட்களில் வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக மக்களுக்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்து ஓட்டு சேகரித்து வருகிறார். இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணியோடு, பிரச்சாரம் முடிவடைய உள்ளதால் அதிகமான வெயில் என்று பாராமல் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி
தேர்தல் பிரச்சாரத்தில் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி

இந்நிலையில் இப்படி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்ததால் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, மயங்கும் நிலைக்கு சென்றுள்ளார்.  இதையடுத்து அவரது தொண்டர்கள், குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மன்சூர் அலிகானை அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு போய் வரும் மன்சூர் அலிகானுக்கு தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். மேலும் அவருக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் முதல் தொண்டர்கள் வரை விசாரித்து வருகின்றனர். 

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை – என்ன காரணம் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *