நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் மன்சூர் அலிகான் ! மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற போவதாக கருத்து !நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் மன்சூர் அலிகான் ! மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற போவதாக கருத்து !

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் மன்சூர் அலிகான். சமீபத்தில் நடிகை திரிஷாவை பற்றி சர்ச்சை கூறிய வகையில் பேசியதால் பலதரப்பிலிருந்து விமர்சனத்திற்கு உள்ளானார் நடிகர் மன்சூர் அலிகான். சில நாட்களுக்கு முன்பு தனது கட்சியின் பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என பெயர் மாற்றம் செய்தார். மேலும் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,

ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது நல்லது ! முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து ! அதிரடி கட்டிய அணி நிர்வாகம்!

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஆரணி தொகுதியில் போட்டியிட உள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிடும் என்று பல்லாவரம் பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *