கேரளாவில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு ! வயநாட்டில் மாவோயிஸ்டுகளுக்கும் அதிரடி படையினருக்கும் இடையே மோதல் !கேரளாவில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு ! வயநாட்டில் மாவோயிஸ்டுகளுக்கும் அதிரடி படையினருக்கும் இடையே மோதல் !

கேரளாவில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு. கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வயநாட்டில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் அதிரடி படையினருக்கு இடையே 2 மணி நேரம் துப்பாக்கி சூடு நீடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கம்பர்மலை பகுதியில் மொய்தீன் தலைமையிலான மாவோயிஸ்டுகளுக்கும் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த அதிரடி படையினருக்கும் இடையே சுமார் இரண்டு மணி நேரம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மேலும் இதை துப்பாக்கிசூட்டில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் மாவோயிஸ்டுகள் வனப்பகுதிக்குள் தப்பியோடிவிட்டதாகவும் அதிரடி படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ! உற்பத்தி செய்த நிறுவனத்தின் ஒப்புதல் – தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அதிர்ச்சி !

மேலும் கம்பர்மலை வனப்பகுதிக்குள் தப்பியோடிய மாவோயிஸ்டுகளை அதிரடி படையினர் தேடி வருகின்றனர். இதே பகுதியில் தேர்தலுக்கு 2 நாள் முன்பாக வாக்களிக்க வேண்டாம் என துப்பாக்கியுடன் மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *