தமிழக மாணவர்களே குட் நியூஸ்..., இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!தமிழக மாணவர்களே குட் நியூஸ்..., இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் பொதுவாக விசேஷ நாட்களிலோ அல்லது பண்டிகை திருவிழா நாட்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் வருகிற மார்ச் 8ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற மார்ச் 8ம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. அப்போது மக்கள் தங்களது குல தெய்வம் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

எனவே இதனை கருத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும், அரசு அலுவலகங்களில் அவசரத்திற்காக குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்கள் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற 23ம் தேதி வேலை நாளாக  அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  

தலைமை செயலகத்தில் பாம் வெடிக்கும்?.., போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபர்?.., களத்தில் இறங்கிய காவல்துறை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *